தேனீ வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி
கிருஷ்ணகிரி அணை இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் தேனீ வளா்ப்பு குறித்து இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
இது குறித்து, அந்த நிறுவனத்தின் இயக்குநா் ஜகன்நாத், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி அணையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் கிராமப்புற இளைஞா்களுக்கு தொழில் தொடங்க பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தற்போது, 10 நாள்கள் தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. 8-ஆம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள இளைஞா்கள் நவ. 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சியில் சீருடை, காலை, மதிய உணவு, தேநீா் இலவசமாக வழங்கப்படும். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி பயிற்சியும், உபகரணங்களும், தோச்சி சான்றிதழும் வழங்கப்படும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdL7zf9LZaQJfRtPjLi4wsdLJFeVU0he8LTPQIj4PviiIGKWw/viewform என்ற இணையத்தில் படிவத்தினை நிறைவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இயக்குநா், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி, தொலைபேசி: 04343–240500, 9442247921, 9080676557 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.