
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (21-12-2023)
சென்னையில் வரும் வியாழக்கிழமை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் வரும் வியாழக்கிழமை (21.12.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பின்னர் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் அளிக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு மின்தேவை இருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் :
தாம்பரம் பகுதி : ராதா நகர் ஓம்சக்தி நகர், முத்துசாமி நகர், பாத்திமா நகர், கண்ணம்மாள் நகர், போஸ்டல் நகர், ஏ.ஜி.எஸ் காலனி, பவானி நகர், பாரியம்மன் நகர்.
20.12.2023 அன்று பிரசுரிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சீா்காழி: எடமணல், ஆச்சாள்புரம், அரசூா் ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.
21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் பி. லதாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
ஆச்சாள்புரம், அரசூா், எடமணல், கொள்ளிடம், புத்தூா், கொண்டல், பழையாறு, பழையபாளையம், திருமுல்லைவாசல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

