TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய
செய்திகள்
மானிய விலையில் விசை உழுவை இயந்திரம்
மானிய விலையில் விசை உழுவை இயந்திரம் பெற விவசாயிகளிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த
வளா்ச்சித்
திட்டத்தின்
கீழ்
இத்திட்டத்துக்குட்பட்ட,
அண்ணா
மறுமலா்ச்சித்
திட்ட
கிராமங்களில்
விசை
உழுவை
இயந்திரம்
மானியத்தில்
வழங்கவும்,
தாழ்த்தப்பட்ட,
பழங்குடியின
விவசாயிகளுக்கு
100%
மானியத்தில்
ஆழ்துளைக்
கிணறு
அமைத்து
சூரிய
சக்தி
மின்
மோட்டார்,
குழாய்
அமைக்கவும்
ஒதுக்கீடு
பெறப்பட்டுள்ளது.
அதன்படி, 34 பேருக்கு விசை உழுவை இயந்திரம் வழங்க ரூ.28.90 லட்சமும், தாழ்த்தப்பட்ட,
பழங்குடியின
விவசாயிகள்
இருவருக்கு
100 சதவீத
மானியத்தில்
ஆழ்துளைக்
கிணறு
அமைத்து
சூரிய
சக்தி
மின்மோட்டார்,
குழாய்கள்
பொருத்திட
ரூ.12
லட்சமும்
நிதி
ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
விசை உழுவை இயந்திரம் சிறு குறு, மகளிர், எஸ்சி., எஸ்டி., விவசாயிகளுக்கு
50 சதவீத
மானியத்திலும்,
இதர
விவசாயிகளுக்கு
40 சதவீத
மானியத்திலும்,
அதிகபட்சம்
ரூ.85,000
என்ற
விகிதத்தில்
பின்னேற்பு
மானியமாக
வழங்கப்படும்.
விருப்பமுடைய
விவசாயிகள்
வேலூா்
உதவி
செயற்பொறியாளா்,
வேளாண்
பொறியியல்
துறை,
தந்தை
பெரியார்
அரசு
பாலிடெக்னிக்
எதிரில்,
தொரப்பாடி,
வேலூா்
– 2, தொலைபேசி
எண்:
0416-2267182
என்ற
முகவரியில்
அணுகி
விண்ணப்பத்தை
அளிக்கலாம்.