‘கற்போம் எழுதுவோம்’
திட்ட தேர்வுகள் – மார்ச்
27 முதல் தொடக்கம்
மத்திய
அரசின் ‘கற்போம் எழுதுவோம்’ திட்டம்
மூலமாக 15 வயதிற்கு மேற்பட்ட
பள்ளி செல்லாதவர்களுக்கு அடிப்படை
கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்கான
வகுப்புகள் துவக்க நடுநிலைப்பள்ளிகளில் தினமும் இரண்டு
மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த
வகுப்புகள் மூலமாக கல்வி
அறிவு இல்லாதவர்கள் கையெழுத்திடவும், வங்கி கணக்குகளை கையாளவும்,
பஸ் எண்களை அடையாளம்
காணவும் பயனுள்ளதாக இருக்கும்.
கற்போம்
எழுதுவோம் திட்டத்திற்கான தேர்வுகள்
மார்ச் 27-ம் தேதி
தொடங்க உள்ளது. அனைத்து
பள்ளி தலைமை ஆசிரியர்களும் தேர்வு அறை, தேர்வர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். இந்த
தேர்வுகளை ஒரு மையத்தில்
20 பேர் என எழுதலாம்.
கெங்கவல்லி ஒன்றியத்தில் வட்டார
வள மைய மேற்பார்வையாளர் சுஜாதா அவர்கள், தேர்வு
தொடர்பாக அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம்
பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 27-ம்
தேதி ஒன்றியம் முழுவதும்
ஒரே நாளாக நடக்க
உள்ளது. தேர்வுகள் காலை
10 மணிக்கு நடக்கும் என்றும்
அறிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


