பணியாளர் அமைச்சகத்தின் எஸ்எஸ்சி(SSC)தேர்வு வாரிய தேர்வுகள் அனைத்தும் நாட்டில் முக்கிய துறைகளில் உள்ள பணியாளர்களை நியமிப்பதற்காக நடத்தப்படுகிறது.
இத்தேர்வுகள் 2014 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹிந்தி அல்லது ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய பணியாளர் தேர்வாணையம் எதிர்காலத்தில் 22 இந்திய மொழிகளில் போட்டி தேர்வுகளை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 8 -வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அனைத்து 22 இந்திய மொழிகளிலும் போட்டி தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிராந்திய மொழிகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடியின் தலைமையில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.