Saturday, August 9, 2025

மத்திய அரசின் இளம் தொழில் முனைவோருக்கான கடனுதவித் திட்டம்

 

Central Government Young Entrepreneurs Loan Scheme

மத்திய அரசின்
இளம் தொழில் முனைவோருக்கான கடனுதவித் திட்டம்

புதிதாக
தொழில் துவங்கும் அனைத்து
இளம் தொழில் முனைவோர்களுக்கு மத்திய அரசும் சரி,
மாநில அரசும் சரி
பல்வேறு மானிய உதவிகளையும், நிதியுவிகளையும் வழங்குகின்றன. அந்த வகையில் 5,00,000 வரை
பிணையம் இல்லாமல் கடன்
உதவி பெறலாம். அதுதான்
மத்திய அரசின் CGTMSE திட்டமாகும்.

சிறு
மற்றும் குறு தொழில்கள்
வட்டார வளர்ச்சிக்கும், நாட்டின்
நிதிநிலையை சமநிலையில் வைத்துக்கொள்ளவும் பெரும் பங்காற்றுகின்றது. ஆனால் அதற்கான
நிதியுதவிகளும், பெருளாதாரக் கைமாற்றுகளும் மறுக்கப்பட்டே வந்துள்ளன.

சிறிய
கடன் உதவிகளுக்கூட பெறுவதற்கு பெரும் திண்டாட்டங்களை சந்திக்கின்றன. இதன் காரணமாக முதல்
தலைமுறை தொழில்முனைவோர்கள் குறுந்தொழில் தொடங்குவதில், தொடங்கிய
தொழில்துறையை நிர்வாகம்
செய்வதிலும் பலவகையான ஆபத்தான
கட்டங்களை தாண்டவேண்டிய சூழல்களுக்கு தள்ளப்படுகின்றன.

எனவே
சிறு குறு தொழிலார்களுக்கு உதவும் வகையில் மத்திய
அரசு தொடங்கிய குறு
மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத
நிதித் திட்டம், முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் சிக்கலை
தணிக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது தொடங்கியுள்ள புதிய
நிறுவனங்கள் இதில் கடன்
உதவி பெற தகுதி
பெற்றவர்கள். குறு, சிறு
மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம், சிறு மற்றும்
நடுத்தர நிறுவனம் மற்றும்
சிறு தொழில் வளர்ச்சி
வங்கி இணைந்து இந்த
நிதி உத்தரவாத திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

கடன்
வழங்கும் நிறுவனங்கள்:

குறு
மற்றும் சிறு தொழிலார்கள் தொழில்களுக்குக் கடன்
வழங்கத் தகுதி பெற்ற
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்
பொது, தனியார் மற்றும்
வெளிநாட்டு வணிக வங்கிகள்
கடன் வழங்கும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட கிராம வங்கிகளும் கடன்
வழங்குகின்றன.

அதாவது
26
பொதுத்துறை வங்கிகள், 21 தனியார்
வங்கிகள், 72 கிராம வங்கிகள்,
4
வெளிநாட்டு வங்கிகள் கடன்
வழங்குகின்றன. 9 வங்கியல்லாத நிறுவனங்கள் கடன்களை வழங்கத்
தகுதி பெற்றுள்ளன.

டெல்லி
நிதிக்கழகம், கேரளா நிதிக்கழகம், ஜம்மு காஷ்மீர் நிதிக்கழகம், ஆந்திர பிரதேச நிதிக்கழகம், இந்திய இறக்குமதி, ஏற்றுமதி
வங்கி, தமிழ்நாடு தொழில்கள்
முதலீட்டுக் கழகம், தேசிய
சிறு தொழில்கள் கழகம்,
வடகிழக்கு வளர்ச்சி நிதிக்கழகம், இந்திய சிறு தொழில்கள்
வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் சிறு மற்றும் குறு
தொழில் முனைவோர் கடன்
பெற்றுக் கொள்ளலாம்.

பிணையன்றிக் கடன் வசதி:

சிறு
மற்றும் குறுந்தொழில் முனைவோர்
இத்திட்டத்தில் எளிதாகக்
கடன் பெறுவதற்கு விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றாம்
நபரின் பிணை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் இருப்பு
மற்றும் மூலதனக்கடனாக நூறு
கோடி ரூபாய் பெற
வழி வகுக்கப்பட்டுள்ளது.

நலிந்த
நிறுவனங்களைப் புனரமைப்பதற்காகவும் கடன் பெற்றுக்கொள்ளலாம். அரசு மற்றும்
குறிப்பிட்ட முகமையின் கீழ்
இயங்கும் சிறு மற்றும்
குறு தொழில் நிறுவனங்களுக்குக் கடன் கிடையாது
என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரவாத
விகிதம்:

கடன்
பெறும் தொழில்முனைவோர் பாதிக்கப்படாமல் இருக்கக் கடன் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட
கடனில் அதிகபட்சமாக 85 விழுக்காடு பாதுகாப்பு உத்தரவாதத்தை இந்தத்
திட்டம் வழங்குகிறது.

50 லட்சம்
பெற்றவருக்கு 75 விழுக்காடும், 5 லட்சத்துக்கு மேல்
கடன் வாங்கியவர்களுக்கு 85 விழுக்காடும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

நடுத்தர
நிறுவன தொழில் முனைவோருக்கும், பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் 80 விழுக்காடு அளிக்கப்படுகிறது.

மொத்த
கடன் தொகையில் 50 விழுக்காடு உத்தரவாதம் இருந்தால் 50 லட்சத்திலிருந்து 100 லட்சம் வரை
கடன் தகுதி உயர்த்தப்படுகிறது.

உத்தரவாத
காலம்:

கடன்
தொகையைச் செலுத்துவதற்கு ஒப்புக்கொண்ட கால அளவு வரை
உத்தரவாதம் பொருந்தும். உழைப்பு
மூலதனத்துக்கு 5 ஆண்டுகள்
வரை அனுமதிக்கவோ, உத்தரவாதத்தை 5 ஆண்டுகளில் தடை செய்யவோ
நேரிடும்.

உத்தரவாத
கட்டணம்:

கடன்
தொகையைப் பொறுத்து ஆண்டுக்
கட்டணமாக 1.0 விழுக்காடு வசூலிக்கப்படுகிறது. 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றால்
0.75
விழுக்காடும், 5 லட்சத்திலிருந்து 100 லட்சம் ரூபாய்
வரை கடன் பெறும்
பெண்கள் மற்றும் குறு
தொழில் முனைவோருக்கு 0.85 விழுக்காடும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

முழுமையான
தகவல்களை தெரிந்து கொள்ள:

குறு
மற்றும் சிறு தொழில்
தொடங்குவோர் இந்த திட்டம்
பற்றிய முழுமையான தகவல்களை
தெரிந்து கொள்ள www.cgtmse.in என்ற இணையதளத்திற்கு சென்று முழுமையான விவரங்களை
அறிந்து கொள்ளலாம்.

சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

Important Notes

இலக்கணம் – 500 முக்கிய வினா விடைகள் (TNPSC, Other Exams Very Important)

இலக்கணம் - 500 முக்கிய வினா விடைகள் (TNPSC, Other Exams...

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

Topics

தமிழக அரசு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2025 – Assistant Medical Officer பணிக்கு ரூ.2,05,700 வரை சம்பளம்! 🏥💼

TN MRB Recruitment 2025 – Assistant Medical Officer பணிக்கு 2 காலியிடங்கள். சம்பளம் ₹56,100 – ₹2,05,700. Any Degree, Diploma, PG Diploma தகுதி. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 28.08.2025.

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2025 – Apprentice பணிக்கு 23 காலியிடங்கள்! 💼📚

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2025 – Apprentice பணிக்கு 23 காலியிடங்கள். சம்பளம் ₹8,000 – ₹9,000. BE/B.Tech, Diploma தகுதி. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 21.08.2025.

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician, IT Coordinator உட்பட 84 காலியிடங்கள்! 💼🏥

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician, IT Coordinator உட்பட 84 காலியிடங்கள். சம்பளம் ₹13,000 – ₹21,000. தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 20.08.2025.

நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உட்பட 20 காலியிடங்கள்! 💼🏥

நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உட்பட 20 காலியிடங்கள். சம்பளம் ₹8,500 – ₹23,000. தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 18.08.2025.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Assistant Librarian பதவிக்கு விண்ணப்பிக்கவும்! 📚💼

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Assistant Librarian பதவிக்கு M.Sc, PG Diploma, PhD தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹30,000. கடைசி தேதி: 15.08.2025.

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு 9 காலியிடங்கள்! 🏭📄

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு B.Sc, BE/B.Tech, CA/CMA, M.Sc தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹31,100 – ₹1,81,500. கடைசி தேதி: 20.08.2025.

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள்! 💼📈

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு Any Degree, B.Sc, BE/B.Tech, MBA, PG Diploma தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹48,480 – ₹93,960. கடைசி தேதி: 26.08.2025.

இந்திய தகவல், வடிவமைப்பு & உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 🎓💼

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு BE/B.Tech, ME/M.Tech தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹37,000. கடைசி தேதி: 21.08.2025.

Related Articles

Popular Categories