ஆதார் ஹேக்கத்தான் 2021 – UIDAI
போட்டி
நடத்துகிறது
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை
விடுதலையின் அம்ரித் மகோத்சவமாக கொண்டாட பிரதமர் நரேந்திர
மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தொழில்நுட்பத் துறையில் புதுமைகளைக் கொண்டாடும் மற்றும் சேவை விநியோகத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தும் ஆண்டு இது.
தான்
வழங்கும் பல்வேறு சேவைகள்
மற்றும் குடியிருப்பு அனுபவங்களை மேலும் மேம்படுத்தும் புதுப்பிக்கப்பட்ட நோக்கத்துடன் அடுத்த
தசாப்தத்தை நோக்கி UIDAI முன்னேறிக் கொண்டிருப்பதால், இந்த
ஆண்டும் ஆதாருக்கு முக்கியமானதாகிறது.
ஆதார்
ஹேக்கத்தான் 2021 என்ற தலைப்பில்
இளம் கண்டுபிடிப்பாளர்களை இலக்காகக்
கொண்ட போட்டி ஒன்றை
UIDAI நடத்துகிறது.
பல்வேறு
பொறியியல் கல்லூரிகளில் பயின்று
வரும் இவர்கள், உண்மையான
உலகத்திற்குள் நுழைய
ஆர்வமாக உள்ளனர். 2021 அக்டோபர்
28 அன்று நள்ளிரவு 12 மணியளவில்
தொடங்கி 2021 அக்டோபர் 31 அன்று
இரவு 11 மணி வரை
ஹேக்கத்தான் நிகழ்வு தொடர்ந்து
நடைபெறும். ஆதார் ஹேக்கத்தான் 2021 இரண்டு தலைப்புகளை மையமாகக் கொண்டது.
“பதிவு
மற்றும் புதுப்பித்தலை” மையமாகக்
கொண்டு முதல் கருப்
பொருள் அமைந்துள்ளது, முகவரியைப் புதுப்பிக்கும் போது
குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் சில நிஜ வாழ்க்கையின் சவால்களை இது உள்ளடக்கியதாக இருக்கும். புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் இந்த
சவால்களை தீர்க்க, அனைத்து
பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களையும் சென்றடைய உடாய் விரும்புகிறது. வெற்றியாளர்களுக்கு ரொக்க
பரிசு மற்றும் பிற
கவர்ச்சிகர நன்மைகள் கிடைக்கும்
எப்படி பதிவு செய்வது?:
ஆதார்
ஹேக்கத்தான் 2021 ஐ பதிவு
செய்ய, https://hackathon.uidai.gov.in/register-team
ஐ பார்வையிட வேண்டும்
செல்லுபடியாகும் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல்
எண்ணுடன் அணியில் பங்கேற்பவர், ஒரு குழுவை மட்டுமே
உருவாக்க முடியும்.
நீங்கள்
ஆதார் எண், கல்லூரி
அல்லது பல்கலைக்கழக பெயர்,
குழு பெயர் மற்றும்
Captcha போன்ற விவரங்களை
உள்ளிட வேண்டும்.
ஒவ்வொரு
கருப்பொருளும் வெகுமதிகளைக் கொண்டுள்ளது. அதன்படி, முதல்
பரிசு ரூ.3,00,000, இரண்டாம்
பரிசு ரூ.2,00,000, மற்றும்
மூன்றாம் பரிசு ரூ.1,00,000
இரண்டு அணிகளுக்கு.
வெற்றி
பெற்ற அணிகளின் உறுப்பினர்கள் ஆதார் 2.0 முயற்சியின் கீழ்
அடுத்த தலைமுறை அடையாளம்
மற்றும் அங்கீகார தளத்தை
உருவாக்க ஆதார் குழுவுடன்
இணைந்து பணியாற்ற வாய்ப்பு
கிடைக்கும்.
மேலும்,
வெற்றி பெற்ற குழு
உறுப்பினர்கள் ஆதார்
2.0-ல் முதல் உலகளாவிய
மாநாட்டில் பங்கேற்க அழைப்பைப்
பெறுவார்கள். பங்குபெறும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.