எஸ்எஸ்சி சுருக்கெழுத்தர் தேர்வு வரும் 11ல்
தொடங்கி 3 நாள் நடக்கிறது
மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சுருக்கெழுத்தாளர் C
மற்றும் D நிலைத்
தோவு (2020), வரும்
நவம்பர் 11, 12, 15 ஆகிய
நாட்களில் காலை 9 முதல்
11 மணி, பிற்பகல் 2 முதல்
4 மணி வரை என
இரு பிரிவுகளாக கணினி
வழியில் நடத்தப்படுகிறது. இத்தேர்வை
தென் மண்டலத்தில் 49,609 பேர்
எழுத உள்ளனர்.
சென்னை,
கோயம்புத்தூர், மதுரை,
திருச்சி மற்றும் திருநெல்வேலியிலும், ஆந்திராவில் குண்டூர்,
கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி,
விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும், தெலுங்கானாவில் ஹைதராபாத், வாரங்கல் என
மொத்தம் 13 இடங்களில், 23 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறவுள்ளது.
தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டுகளை
தேர்வாணையத்தின் இணைய
முகப்பில் இருந்து தேர்வு
தேதிக்கு நான்கு நாட்கள்
முன்பிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும்
விவரங்களுக்கு 044 2825 1139,
94451 95946 ஆகிய எண்களை அணுகலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


