இ–அடங்கலில்
பதிவு செய்திருந்தால் மட்டுமே
பயிர்களுக்கு இழப்பீடு
விவசாயிகள் தோட்டக்கலைப் பயிர்களை
இ–அடங்கலில் பதிவு
செய்திருந்தால் மட்டுமே,
பயிர்கள் சேதமடையும் போது
இழப்பீடு கிடைக்கும் என்று
வந்தவாசி தோட்டக்கலைத் துறை
உதவி இயக்குநா் தெரிவித்தார்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகள் தாங்கள் பயிரிடும் அனைத்து
தோட்டக்கலைப் பயிர்களையும் இ–அடங்கலில் பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
வரும் காலங்களில் சேதமான
பரப்பு இ–அடங்கலில்
பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி
செய்த பின்னரே இழப்பீடு
வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்,
பிரதம மந்திரி பயிர்க்
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பதிவு செய்திருந்தாலும், இ–அடங்கலில்
பதிவு செய்திருந்தால் மட்டுமே
இழப்பீடு வழங்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


