பிஎப் குறைதீா்
கூட்டம் – டிச.6-க்குள்
பதிவு செய்ய வேண்டும்
சென்னை,
அம்பத்தூா் மண்டல பிஎப்
பயனாளிகளுக்கான குறைதீா்
கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், டிச.6-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட பிஎப்
பயனாளிகளுக்கான குறைதீா்
கூட்டம், டிச.10-ஆம்
தேதி, சென்னை முகப்போ
சாலையில் உள்ள ஆா்-40
ஏ டிஎன்எச்பி அலுவலக
வளாகத்தின் மூன்றாவது தளத்தில்
உள்ள பிஎப் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில்
பங்கேற்று தங்கள் குறைகளைத்
தெரிவிக்க விரும்புவோர், அதற்கான
ஆவணங்களை டிச.6-ஆம்
தேதிக்குள் இந்த அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
பின்னா்
கூட்டம் நடைபெறும் நாளில்,
காலை 10.30 முதல் 11.30 மணி
வரை ஊழியா்களும், பிற்பகல்
3 முதல் 4 மணி வரையில்
நிறுவன உரிமையாளா்களும், மாலை
4 முதல் 5 மணி வரையில்
விலக்கு பெற்ற நிறுவனங்களும் பங்கேற்கலாம்.
மேலும்
விவரங்களுக்கு 044 2635 0080,
2635 0120 ஆகிய எண்களை அணுகலாம்