நீங்களும் ஐ.ஏ.எஸ்
ஆகலாம் – ஆன்லைன் வழிகாட்டல்
நிகழ்ச்சி
இரண்டு
ஆண்டு கொரோனா இடைவெளிக்குப் பிறகு கடந்த அக்டோபர்
மாதம் நடந்திருக்கிறது, சிவில்
சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு.
இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்து
பிரதானத் தேர்வையும் அதைத்
தொடர்ந்து நேர்காணலையும் எதிர்கொள்ள வேண்டும்.
ஆனந்த
விகடன் மற்றும் கிங்
மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்.அகாடமி
இணைந்து நடத்தும் ‘நீங்களும்
ஐ.ஏ.எஸ்.ஆகலாம்‘
வழிகாட்டல் நிகழ்ச்சி ஆன்லைனில்
நடக்கிறது.
டிசம்பர்
19-ம் தேதி காலை
மணி 10.30 முதல் 12 வரை
நடக்கும் இந்தக் கருத்தரங்கு கட்டணமில்லாத இலவச
நிகழ்ச்சி.
ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்.
உள்ளிட்ட தேர்வுகள் அடங்கும்
சிவில் சர்வீஸ் தேர்வில்
வெல்ல என்ன செய்ய
வேண்டும்? எப்படியான திட்டமிடல் வேண்டும்? விருப்பப் பாடத்தைத்
தேர்வு செய்யும் முறை,
பயிற்சி என எல்லா
சந்தேகங்களுக்கும் விடை
தரப் போகிறது கருத்தரங்கு.
கருத்தரங்கில், சிவில் சர்வீஸ் தேர்வில்
வென்று தற்போது கரூர்
மாவட்ட ஆட்சித் தலைவராக
இருக்கும் பிரபு ஷங்கர்
ஐ.ஏ.எஸ்.,
தன்னுடைய அனுபவங்களில் இருந்து
சிவில் சர்விஸ் மாணவர்கள்
கடைபிடிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டுப் பேச
இருக்கிறார்.
தொடர்ந்து
இந்தியாவின் பார்வை சவால்
கொண்ட முதல் வெளியுறவுத் துறை அதிகாரி பெனோ
ஜெஃபைன் சிவில் சர்வீஸ்
தேர்வு நடமுறகள் குறித்துப் பேசுகிறார்.
இவர்களுடன் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் நிர்வாக இயக்குநர் பூமிநாதனும் உரையாற்றுகிறார்.
போட்டி
தேர்வுகளுக்கான தயாரிப்பில் இருக்கும் மாணவர்களே, தவற
விட்டு விடாதீர்கள், இந்த
வாய்ப்பை.
ஆனந்த
விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து
நடத்தும் நீங்களும் ஐ.ஏ.எஸ்
ஆகலாம்! – வழிகாட்டல் நிகழ்ச்சி!
ஆன்லைன் கட்டணமில்லாக் கருத்தரங்கு. டிசம்பர் 19, காலை மணி
10.30 முதல் 12 வரை. அனுமதி
இலவசம்
முன்பதிவு செய்ய: https://bit.ly/AV-KingmakersIAS
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


