சிறுபான்மையினர் கடன்
பெற அழைப்பு – விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்
மூலம் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்.
சீக்கியர்கள், புத்த மதத்தினர் பிரிவை
சார்ந்தவர்களுக்கு தனிநபர்
கடன், சிறு தொழில்
கடன் மிக குறைந்த
வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
தனி
நபர் கடன் திட்டத்தில் 6 சதவீத வட்டியில் ரூ.20
லட்சம் வரையும், சுய
உதவி குழுக்கள் அமைத்து
சிறு தொழில், வியாபாரம்
செய்ய குறைந்த பட்சம்
10 பேர் கொண்ட குழுவிற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம்
(தலா ஒரு உறுப்பினருக்கு) வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் முதல்
ரூ.6 லட்சம் வரை
கல்வி கடன் வழங்கப்படுகிறது.
மாவட்ட
சிறுபான்மையினர் நல
அலுவலகம், கூட்டுறவு இணை
பதிவாளர் அலுவலகம், தொடக்க
கூட்டுறவு சங்கங்களில் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.