TNPSC தேர்வு எழுதும்
அனைவருக்கும் முக்கிய
அறிவிப்பு
TNPSC.ல்
ஒரு முறை பதிவுக்
கணக்கு வைத்திருக்கும் அனைவரும்
தங்களது ஆதார் எண்ணை
வரும் 28ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும்
என ஏற்கனவே பலமுறை
இதற்கான அறிவுறுத்தலை தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கியுள்ள நிலையில், மீண்டும்
அறிவுறுத்தியுள்ளது.
இது
குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா
வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான
மாற்றங்களை அறிமுகம் செய்து
அவற்றை நடைமுறைபடுத்தி வருகிறது.
மேலும், தெரிவு முறைகளில்
வெளிப்படைத் தன்மை மற்றும்
நம்பகத் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, போட்டித் தேர்வுகளை
விரைவாக நிறைவு செய்யும்
வகையிலும், அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுப்படுத்தி வருகிறது.
அதன்
தொடர்ச்சியாக தற்போது,
தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் இணையத்தில் ஒருமுறை
நிரந்தரப்பதிவு (One Time
Registration – OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து
தேர்வாளர்களும் தங்களது
ஆதார் குறித்த விவரங்களை
28.02.2022 ஆம் தேதிக்குள் தவறாமல்
இணைத்து, எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெயியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது
ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு
மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும்
இது குறித்து விளக்கம்
ஏதேனும் தேவைப்படுமானால் 18004190958 என்ற
கட்டணமில்லா தொலைப்பேசி அல்லது
helpdesk@tnpscexams.in /grievance.tnpsc@tn.gov.in என்ற
மின்னஞ்சல் மூலமாக அலுவலக
வேலை நாட்களில் காலை
10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை
தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

