விவசாய எந்திரங்களை பழுது பார்ப்பது பராமரிப்பது குறித்த பயிற்சி
வேளாண்மை
பொறியியல் துறையின் சார்பில்
விவசாய எந்திரங்களை பழுது
பார்ப்பது பராமரிப்பது குறித்து
விவசாயிகளுக்கு பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை
பொறியியல் துறையின் சார்பில்
விவசாய எந்திரங்களை பழுது
பார்ப்பது பராமரிப்பது குறித்து
விவசாயிகளுக்கு பயிற்சி
அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்ச்சி
பெற்ற 18 வயது முதல்
45 வயதிற்குட்பட்ட தொழில்
முனைவோர், வேளாண் இயந்திரம்
வாடகை மையம் வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என
ஆட்சியர் சங்கர்லால் குமாவத்
தெரிவித்துள்ளார்.
மேலும்
ராமநாதபுரம், திருப்புல்லானி, மண்டபம்,
ஆர்.எஸ்.மங்கலம்
மற்றும் திருவாடானை வட்டார
விவசாயிகள் மாவட்ட ஆட்சியர்
வளாகத்தில் உள்ள உதவி
செயற்பொறியாளர் அலுவலகம்,
பரமக்குடி, நயினார்கோவில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி மற்றும்
கடலாடி வட்டார விவசாயிகள் பரமகுடி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மற்றும்
ராமநாதபுரம் வேளாண்மை இணை
இயக்குனர் அலுவலகத்திலும் ஆதார்
கார்டு, புகைப்படம் போன்ற
ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


