கோவை மாவட்டத்தில் வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள், புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டத்தில் தமிழக வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட, 116 வக்பு நிறுவனங்களில் உள்ள உலமாக்களுக்கு, புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க, 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில், 50 சதவீதம் என, இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற மனுதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வயது சான்றிதழ்(18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும்) வருமான சான்று, புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருந்தால், உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, ஜாதி சான்று, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி., குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு எண் புத்தகத்தின் முதல் பக்க நகல், எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று, மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் கையெழுத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.இதனுடன் வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். விபரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0422-2300404 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


