TNPSC குரூப்
4 தேர்வுக்கு நாளை முதல்
3 நாட்கள் இலவச பயிற்சி
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த
இரண்டு ஆண்டுகளாக TNPSC
போட்டித் தேர்வுகள் குறித்த
அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது.
தற்போது
அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 2022 ஆம்
ஆண்டிற்கான TNPSC குரூப்
4 தேர்வு ஜூலை 24ம்
தேதி நடைபெற உள்ளது.
அதற்கான விண்ணப்ப பதிவு
ஏற்கனவே தொடங்கிய நிலையில்
ஏப்ரல் 28ம் தேதி
கடைசி நாளாகும்.
இந்நிலையில் TNPSC குரூப் 4 தேர்வு
இலவச பயிற்சி வகுப்புகள் வேப்பேரி பெரியார் அகாதெமியில் ஏப்ரல் 8ம் தேதி
முதல் ஏப்ரல் 10ம்
தேதி வரை (காலை
10 மணி முதல் பிற்பகல்
ஒரு மணி வரை)
மூன்று நாட்கள் நடைபெற
உள்ளது.
இதில்
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு
செய்ய வேண்டும். மேலும்
இது குறித்த கூடுதல்
விவரங்களுக்கு 044 2661 8056,
99406 38537 ஆகிய எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.
மேலும்
வேப்பேரியில் உள்ள
அகாதெமியை நேரில் அணுகலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


