TET தேர்வுக்கு விண்ணப்பிக்க நீட்டிப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் – அமைச்சர்
தமிழகத்திலுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி
ஆசிரியர்களின் காலிப்
பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு
வருடமும் அரசு சார்பாக
ஆசிரியர் தகுதி தேர்வு
நடத்தப்பட்டு வருகிறது.
இதில்
பட்டப்படிப்புடன் பி.எட்,
இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்களாக பணியாற்ற
தமிழக அரசு நடத்தும்
ஆசிரியர் தகுதிக்கான TN TET-தேர்வில்
கட்டாயம் தேர்ச்சி பெற
வேண்டும்.
அதேபோன்று
இந்த ஆண்டும் ஆசிரியர்
தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி
தேர்வினை நடத்த இருக்கிறது. இந்த ஆண்டும் ஆசிரியர்
தகுதி தேர்வு தொடர்பான
அறிவிப்பு கடந்த மார்ச்
7ம் தேதி வெளியாகியது.
இதையடுத்து தேர்வுக்கான விண்ணப்பபதிவு மார்ச்
14ஆம் தேதி தொடங்கி,
ஏப்ரல் 13 ஆம் தேதி
முடிவடைந்தது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீடிக்க
வேண்டும் என்று கோரிக்கை
எழுந்துவரும் நிலையில்,
டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்துள்ள நிலையில், காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை
நடத்தப்படும் என்று
அமைச்சர் அன்பில் மகேஷ்
தெரிவித்துள்ளார்.