HomeBlogUPSC தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள்
- Advertisment -

UPSC தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள்

Tutorials for enthusiasts facing UPSC exams

UPSC
தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள்

தமிழ்நாடு
அரசால் நடத்தப்பட்டு வரும்,
அகில இந்திய குடிமைப்
பணிகள் பயிற்சி மையத்தில்,
மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப்
பணிகளில் அடங்கிய முதல்நிலை,
முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக,
கிராமப்புரங்களில் உள்ள,
சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும்,
இம்மையத்தில் ஜனவரி
17
முதல் மார்ச் 8 வரை
மத்திய தேர்வாணைய இந்திய
வனப்பணி தேர்விற்காக 12 ஆர்வலர்கள் தங்கி பயின்றார்கள். அவர்களில்
8
ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3 ஆர்வலர்கள் மகளிர்
என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய
வனப்பணி முதன்மைத் தேர்வில்
தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த ஆர்வலர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி
ஆளுமைத் தேர்வு, பணியில்
உள்ள மற்றும் ஓய்வு
பெற்ற அகில இந்திய
குடிமைப் பணி அலுவலர்களாலும், தலை சிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது. இது,
தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள், தங்களது மாதிரி ஆளுமைத்
தேர்வை மிகச் சிறப்பான
முறையில் எதிர்கொள்ள ஏதுவாக
அமையும்.

இப்பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி
பெற்றுள்ள ஆர்வலர்கள் தவிர,
மேற்குறித்த வனப்பணி முதன்மைத்
தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள
பிற ஆர்வலர்களும், இப்பயிற்சி மையத்தால் நடத்தப்பட உள்ள
மாதிரி ஆளுமைத் தேர்வில்
பங்கு பெற அனுமதிக்கப்படுவர். இதற்கென கட்டணம்
ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற
விரும்பும் ஆர்வலர்கள், தங்களது
விருப்பத்தினை, aicscc.gov@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9444286657
என்ற புலன் எண்ணிற்கோ
(
வாட்ஸ்அப்) அல்லது
044-24621909
என்ற தொலைபேசி எண்ணிற்கோ
தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம்.

மாதிரி
ஆளுமைத் தேர்விற்கான தேதி
குறித்த விவரங்கள் இப்பயிற்சி மையத்தின் www.civilservicecoaching.com என்ற
இணைய தளத்தில் விரைவில்
அறிவிக்கப்படும்.

இப்யிற்சி
மையத்தால் நடத்தப்படும் மாதிரி
ஆளுமைத் தேர்வில் கலந்து
கொண்டு டெல்லி செல்லும்
ஆர்வலர்களுக்கு, பயணச்
செலவு தொகையாக ரூ.5000
வழங்கப்படும் அரசு
கூறியுள்ளது.

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -