அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு தேவைப்படும் பயனாளிகளுக்கு அழைப்பு
– வால்பாறை
வால்பாறை
நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு தேவைப்படும் பயனாளிகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு
நகர்புற வாழ்விட மேம்பாட்டுவாரியத்தின் சார்பில், வால்பாறை
நகரில், 80 வீடுகள் கொண்ட
அடுக்குமாடி குடியிருப்பு கட்டும்
பணி நடக்கிறது. இந்நிலையில், மேற்படி அடுக்குமாடி கட்டடத்தில், வீடு ஒதுக்கீடு பெற
விரும்புபவர்களுக்கு தற்போது
விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் அறிவிப்பு வருமாறு:
வால்பாறை
காமராஜ் நகரில், 80 வீடுகள்
கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.பயனாளிகள்
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட
பகுதியில் வசிப்பவராக இருக்க
வேண்டும். மாத வருமானம்,
25,000 ரூபாய்க்குள் இருக்க
வேண்டும். பயனாளிகளுக்கு சொந்தமாக
வீடோ, மனையிடமோ இருக்கக்கூடாது. பயனாளிகள் திருமணமானவராக இருக்க
வேண்டும்.விண்ணப்பத்துடன், இரண்டு
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,
ஆதார் கார்டு, வாக்காளர்
அடையாள அட்டை, ரேஷன்கார்டு, வங்கி கணக்கு புத்தக
நகல் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தை, நிர்வாக
பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற
வாழ்விட மேம்பாட்டுவாரியம், செல்வபுரம் வடக்கு, கோவை, என்ற
முவரிக்கு அனுப்ப வேண்டும்.