ஜேஇஇ
தேர்வு எழுதாமலேயே பட்டப்படிப்பு – சென்னை ஐஐடி
ஜேஇஇ தேர்வுகள் எழுதாமலேயே சென்னை ஐஐடியில் மாணவர்களை சேர்க்கும் திட்டத்தின்கீழ் பிஎஸ்சி பட்டபடிப்பு தொடங்கியுள்ளது.
சென்னை, கோவை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள் வரை பல்வேறு இடங்களை சேர்ந்தவர்களுக்கும், கிராமப்புறம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே ஐஐடியில் சேர வழிவகை செய்யப்பட்டிருந்தது.
சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி 180க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


