தோட்டக்கலை துறை
சார்பில் இலவச குறுகிய
கால பயிற்சி
தோட்டக்கலை தொடர்பாக, இலவச குறுகிய
கால பயிற்சி, மாதவரத்தில் நடைபெற உள்ளது.அரசு
தோட்டக்கலை, மலைப் பயிர்
துறை மற்றும் திறன்
மேம்பாட்டுக் கழகம்
இணைந்து நடத்தும் இலவச
குறுகிய கால பயிற்சி
வகுப்புகள், திருவள்ளூர் மாவட்டம்,
மாதவரம் தோட்டக்கலை மேலாண்மை
நிலையத்தில் நடைபெற உள்ளது.
இதில்,
தோட்டக்கலை மேற்பார்வையாளர் – 25 நாள்;
தோட்டக்கலை பணியாளர் – 43 நாள்
மற்றும் மலரியல் தொழில்
முனைவோர் – 25 நாட்கள் பயிற்சி
நடைபெறும்.
திங்கள்
– வெள்ளிக்கிழமை, காலை
9:00 மணி முதல், மாலை
5.00 மணி பயிற்சி நடைபெறும்.இலவசமாக
வழங்கப்பட உள்ள இப்பயிற்சிக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி,
பட்டப்படிப்பு, இளநிலை
மற்றும் முதுநிலை கல்வித்
தகுதி உடையோர், 18 – 40 வயதிற்கு
உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
மேலும்,
விபரங்களுக்கு நேரிலோ
அல்லது, 93448 00716, 79049 67050, 72995
19348 மற்றும் 84897 42975 ஆகிய
தோட்டக்கலை துறை அலுவலர்களின், மொபைல்போன் எண்ணில் தொடர்பு
கொள்ளலாம் என, மாதவரம்
தோட்டக்கலை மேலாண்மை நிலையம்
தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


