துலிப் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை
வாய்ப்பு பயிற்சி
துலிப்
திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை வாய்ப்பு பயிற்சிக்கு, பட்டதாரிகள் ஆன்லைன் வாயிலாக
விண்ணப்பிக்கலாம் என,
மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற
கற்றல் வேலைவாய்ப்பு திட்டமானது(துலிப்), வீட்டு வசதி
மற்றும் நகர்ப்புற அலுவல்
அமைச்சகம், அகில இந்திய
தொழில்நுட்ப கல்வி கழகம்
ஆகியவற்றுக்கும் இடையிலான
ஒரு கூட்டு முயற்சியாகும்.
துலிப்
திட்டத்தின் கீழ், புதிய
பட்டதாரிகள் தன்னம்பிக்கை பெறுவதற்கும், மாநகராட்சி புதுமையான யோசனைகளை
வழங்குவதற்கும், பயிற்சி
களை கோவை ‘ஸ்மார்ட்
சிட்டி‘ நிறுவனம் அளிக்க
முன்வந்துள்ளது.
அதன்படி,
விண்ணப்பதாரர்கள் கடந்த,
18 மாதங்களுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க
வேண்டும். இந்த வேலை
வாய்ப்பு பயிற்சி காலம்
ஆறு மாதம். பயிற்சிக்கான மாத ஊக்கத்தொகை, 10 ஆயிரம்
ரூபாய் வழங்கப்படுகிறது.விஷூவல்
கம்யூனிகேஷன், பி.ஆர்க்.,
எம்.ஆர்க்., பி.இ.,
பி.டெக்.,(ஐ.டி.,),
எம்.பி.ஏ.,
‘பி.ஜி.டி.எம்.,
இன் ஈவென்ட் மேனேஜ்மென்ட்‘, எம்.ஏ., (தமிழ்/ஆங்கிலம்)
கம்யூனிகேஷன் படித்தவர்கள் இதற்கு தகுதியானவர்கள். https://internship.aicte-india.org/ என்ற இணையதளம் மூலமாக
வரும், 24ம் தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு
பிரிவிலும் உள்ள பயிற்சிகால காலி பணியிட விபரங்களை,
இந்த இணையதளத்தில் அறியலாம்.
ஆர்வமுள்ள, தகுதி வாய்ந்த
மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


