HomeBlogTNPSC அறிவிப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் தமிழ்நாடு கருவூலங்களில் கணக்கு அலுவலர் பணி

TNPSC அறிவிப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் தமிழ்நாடு கருவூலங்களில் கணக்கு அலுவலர் பணி

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு கருவூலங்களில் கணக்கு அலுவலர் பணி – TNPSC அறிவிப்பு

தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலை துறைகள் உட்பட பல்வேறு துறைகள் மூலம் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக, ஒவ்வொரு துறைகள் சார்பிலும் திட்டம் மதிப்பீடு தயார் செய்வது. ஒப்பந்தப்புள்ளி கோருதல் போன்ற பணிகளில் கண்காணிப்பாளர்கள் நிலையிலான அதிகாரிகள் பணியில் ஈடுபடுவார்கள்.

தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்கு துறைகளுக்கு அதன் விவரங்களை அனுப்பி வைப்பார்கள்.

அதன்பிறகு கருவூலத்துறை சார்பில் நிதி விடுவிக்கப்படுவது வழக்கம். ஆனால் சமீப காலமாக கருவூலம் மற்றும் கணக்கு துறைகளில் காலிப்பணியிடங்களால் இப்பணிகள் விரைந்து முடிப்பதில் சிக்கல். இதனை எடுத்து ஆய்ந்து ஆண்டுகள் கண்காணிப்பாளர் பணி முடித்தவர்களை கணக்கு அலுவலராக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: கணக்கு அலுவலர் பணிக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 23 (17 முன்கொணறப்பட்ட காலிப்பணியிடங்கள் உட்பட)

ஊதிய விவரம்: பல்வேறு தேர்வு நடைமுறைகளுக்கு ப் பிறகு பணியமர்த்தப்படும் கணக்கு அலுவலர்களுக்கு அரசின் நிலை 23 ன் படி 56,900 ரூபாய் முதல் 2,09,200 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்: 15. ஆம் தேதி என்று கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டது.

13.08.2022 ஆம் தேதிக்குள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் 08.10.2022 ஆம் தேதி விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழியில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பதாரர்களுக்கான தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேவையான அளவு தமிழ் மொழி அறிவு இருக்க வேண்டும். சி ஏ எனப்படும் இந்திய பட்டய கணக்காளர்கள் (chartered account) நடத்திய இறுதி தேர்வில் தேர்ச்சி அவசியம்.

தேர்வுக்கான கட்டணம்: விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுக்கான கட்டணமாக 200 ரூபாய் செலுத்த வேண்டும்.

நிரந்தர பதிவு கட்டணம் 150 ரூபாய் செலுத்த வேண்டும். ஆதி திராவிடர்/ ஆதி திராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு நடைமுறை: டிஎன்பிஎஸ்சி விதிமுறைகளின் படி விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழியில் தேர்வு நடைபெறும். கொள் குறி வகை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மொத்தம் 810 மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும்.

வயதுவரம்பு: 01.07.2022 விண்ணப்பதாரர் களுக்கு 32 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதி திராவிடர் அருந்ததியர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், சீர் மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

Notification: Click Here

Apply: Click Here

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular