TAMIL MIXER
EDUCATION.ன்
கல்லூரி செய்திகள்
பாலிடெக்னிக்
கல்லூரிகளில்
முதல்பருவத்
தேர்வுகள்
25ல்
தொடக்கம் – அனுமதிச் சீட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்
தமிழகத்தில் பாலிடெக்னிக்
கல்லூரிகளில்
நிகழ்
கல்வியாண்டுக்கான
முதல்
பருவத்
தேர்வுகள்
நவ.25ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
தமிழக தொழில்நுட்பக்
கல்வி
இயக்குநரகத்தின்
கீழ்
505 அரசு,
அரசு
உதவி
மற்றும்
தனியார்
பாலிடெக்னிக்
கல்லூரிகள்
செயல்பட்டு
வருகின்றன.
இவற்றில்
சுமார்
3 லட்சம்
மாணவா்கள்
பயில்கின்றனா்.
இவா்களுக்கு ஆண்டுக்கு இரு பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
நிகழாண்டுக்கான
முதல்
பருவத்
தேர்வுகள்
இந்த
மாதம்
25ம்
தேதி
தொடங்கி
பாடவாரியாக
டிச.17
வரை
நடத்தப்படவுள்ளன.
அதேபோல், செய்முறை தேர்வுகள் டிச. 13ம் தேதி தொடங்கும். விடைத்தாள் திருத்தும் பணிகள் டிச.19ம் தேதி தொடங்கி நடைபெறும். தேர்வுகள் முடிந்தபின் மாணவா்களுக்கு
டிச.
18 முதல்
ஜன.
1 வரை
விடுமுறை
அளிக்கப்படவுள்ளது.
அதன்பின் கல்லூரிகள் மீண்டும் ஜன. 2ம் தேதி திறக்கப்படும்
என
தொழில்நுட்பக்
கல்வி
இயக்குநரகம்
தெரிவித்துள்ளது.
தட்டச்சுத் தேர்வில் மாற்றம்: தொழில்நுட்பக்
கல்வி
இயக்குநரகத்தின்
கட்டுப்பாட்டில்
தமிழகம்
முழுவதும்
தட்டச்சு
பயிற்சி
நிறுவனங்கள்
செயல்படுகின்றன.
இவற்றில் பயிலும் மாணவா்களுக்கு
இதுவரை
நடத்தப்பட்ட
தேர்வு
முறையில்
புதிய
மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
அதன்படி புதிய முறையிலான தட்டச்சுத் தேர்வு நவ. 12, 13ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை தேர்வா்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


