TAMIL MIXER
EDUCATION.ன்
புதுச்சேரி
செய்திகள்
மக்களுக்கான இறுதி ஈமச்சடங்கு உதவி தொகை உயர்வு – புதுச்சேரி
புதுச்சேரி அரசு வறுமைக் கோட்டுக்குக்
கீழ்
உள்ளோருக்குத்
தேவையான
அனைத்து
உதவிகளையும்
செய்து
வருகிறது.
அந்த
வகையில்
ஆதிதிராவிடர்
நலம்
மற்றும்
பழங்குடியினர்களுக்கென
பல்வேறு
புதிய
திட்டங்களும்
செயல்படுத்தப்படுகின்றன.
இதில்
குறிப்பாக
ஆதிதிராவிடர்
நலத்துறை
மூலம்
பட்டா
மாற்றம்,
விடுபட்டவர்களுக்குப்
பட்டா
வழங்கப்பட்டு
வருகிறது.
இதே போல், வறுமைக்கோட்டுக்குக்
கீழ்
உள்ள
விடுபட்டவர்களுக்கு
சிவப்பு
நிற
ரேஷன்
அட்டை
வழங்குதல்
உள்ளிட்ட
பல்வேறு
வகையான
நலத்திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை
தொடர்ந்து
ஆதிதிராவிட
மற்றும்
பழங்குடி
மக்களுக்கு
உதவும்
வகையில்
இறுதி
ஈமச்சடங்கிற்காக
உதவி
தொகை
வழங்கப்பட்டு
வருகிறது.
தற்போது இறுதி ஈமச்சடங்கிற்கான
உதவி
தொகை
15 ஆயிரம்
வரை
வழங்கப்பட்டு
வருகிறது.
இந்த
தொகையை
25 ஆயிரமாக
உயர்த்தி
புதுச்சேரி
முதல்வர்
உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
அதன்படி
ஆதிதிராவிட
மற்றும்
பழங்குடி
மக்களுக்கான
இறுதி
ஈமச்சடங்கு
உதவி
தொகை
ரூ.
25 ஆயிரம்
என
ஆதிதிராவிடர்
நலத்துறை
அமைச்சர்
அறிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


