🍽️ ராணிப்பேட்டை மாவட்டம் – எம்ஜிஆர் சத்துணவு பிரிவில் வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாட்டில் அரசு வேலை தேடுபவர்களுக்கு முக்கியமான செய்தி இது!
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் (Computer Operator) பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு நிரப்பப்படுகிறது.
📍 பணியிடம்
ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், ராணிப்பேட்டை மாவட்டம் – சத்துணவு பிரிவு
📅 விண்ணப்ப தேதி
- விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 06.10.2025
- கடைசி தேதி: 13.10.2025
விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
👩💻 பணியின் பெயர்
கணினி அனுபவத்துடன் கூடிய உதவியாளர் (Computer Operator)
🎓 கல்வித் தகுதி
- அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும்.
- MS Office-ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு (Lower Grade) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 01.07.2025 அன்று 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
💰 சம்பளம்
- மாதம் ₹14,000 தொகுப்பூதியம்.
⚙️ பணிநியமன விதிமுறைகள்
1️⃣ இப்பணியிடம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
2️⃣ பணியாளர் ரூ.200 மதிப்பிலான முத்திரைத்தாளில் ஒப்பந்த பத்திரம் அளிக்க வேண்டும்.
3️⃣ பணித் திறன் திருப்திகரமாக இருந்தால், ஒவ்வொரு 11 மாதங்களும் இடைவெளி விட்டு பணிநீட்டிப்பு வழங்கப்படும்.
4️⃣ இந்தப் பணிக்கு நிரந்தர நியமன உரிமை கிடையாது.
5️⃣ அரசு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு வரம்பிற்குள் மட்டுமே இப்பணி தொடரும்.
6️⃣ தமிழ்நாடு அரசு அலுவலர் விதிமுறைகள் இதில் பொருந்தாது.
📨 விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடையவர்கள் தங்களது விண்ணப்பத்தை கல்விச் சான்றுகளுடன் இணைத்து,
ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக 13.10.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
🔔 மேலும் அரசு வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு இங்க சேருங்கள் 👇
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்