சென்னையில் இயங்கி வரும் தனித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.இந்த ஆன்லைன் பயிற்சி எப்படி நடக்கும் என்பதற்கான மாதிரி...
வேலைவாய்ப்பு பெற இளைஞர்கள் எந்த துறைகளில் கவனம் செலுத்தலாம்ஸ்டாக் டெவலப்பர்ஸ் (Full stack developers):டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஸ்டாக் டெவலப்பர்ஸ்க்கான தேவை அதிகரித்துள்ளது. வலைதளம் உருவாக்குவது முதல் பராமரிப்பு, நிர்வாகம் என அனைத்து பொறுப்புகளையும் கவனிக்க வேண்டும். front-end மற்றும் back-end - ஐ கையாளும் திறமை ஒருவரிடமே இருந்தால், அவருக்கான தேவை, பெருநிறுவனங்களில் கொட்டிக்கிடக்கிறது. ஜாவா, பைத்தான், ராலிஸ் ஆன் ரூபி (Ruby on Rails) உள்ளிட்ட கோடிங் நுட்பத்தில் திறமை வாய்ந்தவராக இருந்தால், நல்ல நிறுவனங்களில் எதிர்பார்க்கும் ஊதியத்துடன் வேலைகள் தயாராக இருக்கின்றன.செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence):இந்தியாவில் ஆர்டிபிஸியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுக்கான தேவை உள்ளது. ஏறத்தாழ 2,500 காலியான Artificial intelligence பதவிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. Artificial intelligence இயந்திரங்களை இயக்குவது, இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற அவர்களின் பொறுப்பு ஆகும். மேலும், AI -ன் அல்காரிதம்ஸ் (algorithms), புரோகிராமிங் (programming) ஆகியவற்றை புரிந்துகொண்டு உருவாக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு தேசிய செயற்கை நுண்ணறிவு திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, கல்வி, விவசாயம், சுகாதாரம் உளிட்ட அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப, தனியார் மற்றும் அரசு இணைந்து புதிய திட்டங்களை முன்னெடுக்க உள்ளனர். இதனால், இந்ததுறை நல்ல வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.டேட்டா சயின்டிஸ்ட் (Data scientist):தரவு அறிவியல் அல்லது தரவு பகுப்பாய்வு என்பது ஒரு நிகழ்வை தரவின் அடிப்படையில் முன்கூட்டியே கணித்து கூறுவதாகும். இதனடிப்படையில், ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப, திட்டங்களை வழிவகுத்து நடைமுறைபடுத்துவதாகும். டெக் உலகில் போட்டி கடுமையாக இருப்பதால், டேட்டா சயின்ட்ஸ்ட் படித்தவர்களின் தேவை அதிகளவு இருக்கிறது. இந்த துறையில் சாதிக்க விரும்புபவர்கள் கணிதம், புள்ளியியல், அட்டவணை மற்றும் காட்சிப்படுத்தல் கருவிகளுடன் பணிபுரிதல், SQL, பைதான் ஸ்கிரிப்டிங் மொழிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டர்ஸ் (Digital marketers):ஒரு பிராண்டை சந்தைப்படுத்துவதிலும், பிரபலப்படுத்துவதிலும் டிஜிட்டல் மார்க்கெட்டர்ஸின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏராளமான பிராண்டுகள், டெக் நிறுவனங்கள் இருப்பதால், அவை தங்களை சந்தைப்படுத்திக்கொள்வதில் டிஜிட்டல் மார்க்கெட்டர்ஸை முழுமையாக சார்ந்திருக்கின்றனர். இதனால், அவர்களின் தேவை தொழில்நுட்ப உலகில் அதிகளவு இருக்கிறது. வித்தியாசமான ஐடியா மற்றும் கிரியேடிவ் திங்கிங் உள்ளவர்கள் இந்த துறையில் சாதிக்க முடியும். குறிப்பாக, எம்.பி.ஏ அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங் முடித்தவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.2021 வேலைவாய்ப்பு:ஐடி நிறுவனங்கள் முழுமூச்சாக டிஜிட்டல் துறையில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். இதனால், தொழில்நுட்ப துறையில் தேர்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களின் தேவையை அவர்கள் சார்ந்திருக்கின்றனர். இதனால், தற்போது இருக்கும் திறமையை விட, சந்தையின் போக்கு அறிந்து அதற்கேற்ப தங்களின் திறமைகளையும் வளர்த்துக்கொள்பவர்கள் டிஜிட்டல் உலகில் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். ஒரு துறையில் மட்டும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இல்லாமல், பலதுறையில் வல்லுநர்களாக இருப்பவர்களை மட்டுமே நிறுவனங்கள் விரும்புகின்றனர். அதனால், பல்துறை வல்லுநர்களாக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேர்வர்கள் ஆங்கிலம் மட்டும் இந்தியில் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த அறிவிப்பிற்கு தமிழத்தில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள் இதனை தொடர்ந்து இந்திய அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா, சு.வெங்கடேசன் MP.க்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் உள்ளிட்ட வேலைகளுக்கான மையப்படுத்தப்படாத துறை வாரிய தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று தெரிவித்துள்ளார்.இந்த பதில் கடிதத்தை செய்தி குறிப்பாக சு.வெங்கடேசன் MP வெளியிட்டுள்ளார். இது தமிழர் திருநாளுக்கு கிடைத்த பரிசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சலக தேர்வுகள் வரும் பிப்ரவ்ரி மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2020- 21 ஆண்டுக்குரிய பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (SYLLABUS) பள்ளிக் கல்வித் துறை வெளியீடுClick Here to Download 10th STD New Syllabus 2020-202112th STD New Syllabus 2020-2021 ...
சுயதொழில் புரிய
விரும்புபவர்கள் அஞ்சலக
முகவராகலாம்
இந்தியாவில் இன்றும் ஒரு அஞ்சலகம்
கூட இல்லாத, சில
பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய இடங்களில் அஞ்சலகங்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, அஞ்சலக
முகவர்களை உருவாக்குவதுடன், மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.
இதன்படி
அஞ்சலக முகவர்...
நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் கஷாயம்
விற்பனை செய்ய முகவர்கள்
தேவை-வீட்டிலேயே சுயதொழில் புரிய உதவும்
மத்திய
மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற , தமிழகம் முழுவதும்
சிறந்த முறையில் விற்பனையாகி கொண்டுயிருக்கும், உடனடி
கபசுர குடிநீர் கஷாயம்
விற்பனை செய்ய...