தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி
இந்திய
அரசு மத்திய பனைப்
பொருட்கள் நிறுவனம், கேவிஐசி
சார்பில் ஈரோட்டில் தங்க
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
நாளை (28ம் தேதி)
முதல் பிப்.6ம்
தேதி நடக்கிறது.
தங்கத்தின் விலை கணக்கிடும் முறை,
கொள்முதல் செய்யும் முறை,
உரைகல்லில் தங்கத்தின் தரம்
அறிதல், கடன்...
சத்துணவுத் துறையில்
காலிப்பணியிடங்கள் & ஓய்வூதியமும் – சங்க கூட்டத்தில்
தீர்மானம்
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக
கூட்டரங்கில், சத்துணவு
ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம்
நடைபெற்றது.
இந்த
கூட்டத்தில் மாவட்ட துணைத்
தலைவர் பெரியசாமி, மாவட்டச்
செயலாளர் கொளஞ்சி ஆகியோர்
பங்கேற்றனர். இந்த...
2020-21ம் கல்வி ஆண்டிற்கு 11ம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (தமிழ் வழி) வெளியீடு!!!Click Here to Download 11th STD Revised Syllabus (2021)10th STD New Syllabus 2021 - Click...
புதுச்சேரி மாணவர்களுக்கு IAS பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, மாணவர்களுக்கு இந்திய அளவிலான குடிமைப்பணி போட்டிகளில் கலந்து கொள்ள
அரசு சார்பில் மையங்கள்
அமைக்கப்பட்டு பயிற்சி
வழங்கப்படும் என
தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின
விழாவில் கலந்து கொண்ட
கவர்னர்...
கேங்மேன் பணி
தொடர்பான வழக்கில் சுமுகமான
தீர்வு ஏற்பட்டால் 10 ஆயிரம்
பேருக்கு பணி வழங்கப்படும்
மின்
வாரியத்தில் உள்ள கேங்மேன்
பணி தொடர்பான வழக்கில்
சுமுகமான தீர்வு ஏற்பட்டால் 10 ஆயிரம் பேருக்கு பணி
வழங்கப்படும் என
மின்சாரத்துறை அமைச்சர்
தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்
மாவட்டத்திற்கு அருகில்
உள்ள புதுசத்திரம்...
Landline
Broadband and Fiber Net
சேவையினை பயன்படுத்தும் அரசு
ஊழியர்களுக்கு 10 சதவிகிதம்
சலுகை
Landline Broadband and Fiber Net சேவையினை
பயன்படுத்தும் அரசு
ஊழியர்களுக்கு 10 சதவிகிதம்
சலுகை வழங்க BSNL நிறுவனம்
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
BSNL
அதிகாரிகள் கூறியாதவது:
அரசு
ஊழியர்களை BSNL வாடிக்கையாளர்களாக தக்கவைக்க
BSNL...
வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை-தர்மபுரி
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர்க்கு, அரசு
சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில்
இந்த உதவித்தொகை பெற
விருப்பமுள்ளவர்கள் வருகிற
31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வேலைவாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை
ஒவ்வொரு
ஆண்டும்
வழங்கப்படுகிறது....
வேலைவாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை திட்டம்
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர்க்கு அரசு
சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் சென்னை
கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு
விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம்...
கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிக்கும் முறைஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே கிசான் கிரெடிட் கார்டில் (கே.சி.சி) புதிய வட்டி விகிதத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.கடந்த 1998 ஆண்டு, தொடங்கப்பட்ட கிசான் கிரெடிட் கார்டு விவசாயிகள், தனிநபர், உரிமையாளர்-விவசாயிகள்,விவசாய பங்குதாரர், சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்புக் குழு விவசாயிகள், கடல் மீனவர்கள், கோழி, பால் மற்றும் மகளிர் குழுக்கள் ஆகியோருக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. இந்த கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலம் ஒரு லட்சம் வரை கடன் பெறலாம்.கிசான் கிரெடிட் கார்டு புதிய வட்டி விகிதம்:சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி கிசான் யோஜனாவின் கீழ் அனைத்து பயனாளிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கும் பிரச்சாரத்தை தொடங்கினார்.இந்த முயற்சியின் பலனாக நாடு முழுவதும் தற்போது பி.எம். கிசான் திட்டத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டுள்ளதுடன், கிராமப்புறங்களில் உள்ள 2,000 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் மூலம் விவசாயிகளுக்கு கே.சி.சி வழங்கும் பணியில் நடைபெற்று வருகிறது.மேலும் கே.சி.சி திட்டத்தின் கீழ் கடன் பெறும், விவசாயி ஆண்டுக்கு 7 சதவீதம் என்ற விகிதத்தில் ஒரு வருடம் அல்லது உரிய தேதிக்குள் வட்டி அல்லது அசல் செலுத்த வேண்டும். உரிய தேதிகளுக்குள் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், கிசான் கிரெடிட் கார்டு விகிதத்தில் வட்டி வசூலிக்கப்படும். இதில் பயிர்கள் கடன்கள் பெற்றுள்ள விவசாயிகள், எதிர்பார்க்கப்பட்ட அறுவடை மற்றும் சந்தைப்படுத்தல் காலத்திற்கு ஏற்ப கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?கிசான் கிரெடிட் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க, பல நிதி நிறுவனங்கள் உள்ளன.கே.சி.சி ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை:நீங்கள் கடன் அட்டையைப் பெற விரும்பும் நிதி நிறுவனத்தின் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.கிடைக்கக்கூடிய கிரெடிட் கார்டுகளின் பட்டியலிலிருந்து கிசான் கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுத்து, 'விண்ணப்பிக்கவும்' என்பதைக் கிளிக் செய்க.தொடர்ந்து ஸ்கிரீனில் காண்பிக்கப்படும் படிவத்தில், முகவரி மற்றும் உடங்களின் தொடர்புடைய தகவல் உள்ளிட்ட உங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்அடுத்து முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்கப்பட்டதும், நீங்கள் ஒரு விண்ணப்ப குறிப்பு எண்ணைப் பெறுவீர்கள். இந்த குறியீட்டு எண் எதிர்கால இந்த கேசிசி தொடர்பான கேள்விகள் மற்றும் குறிப்புகளுக்கு பயன்படுத்தப்படும்.மேலும், உங்களின் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னர் விண்ணப்ப படிவம் செயல்முறைக்கு வர பொதுவாக 3 முதல் 4 வேலை நாட்கள் ஆகும். உங்கள் விண்ணப்ப படிவம் சரிபார்ப்பு செயல்முறைக்கு சென்றவுடன் நிதி நிறுவனம் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.முக்கிய ஆவணங்கள்:இந்த கிரெடிட் கார்டு பெறுவதற்கு, அடையாளச் சான்று (ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் ஐடி), முகவரி ஆதாரம், சொத்து ஆவணம், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஒரு குறிப்பிட்ட நிதி நிறுவனம் பெறக்கூடிய வேறு எந்த சிறப்பு ஆவணங்களையும் (பாதுகாப்பு பி.டி.சி போன்றவை) நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.கிசான் கிரெடிட் கார்டின் வரம்பு:கிசான் கிரெடிட் கார்டில் குறைந்த வரம்பு ரூ. 10,000 முதல் குறு விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் வரையும், மற்ற அனைத்து விவசாயிகளும் முன்மொழியப்பட்ட பயிர் முறை மற்றும் நிதி அளவைப் பொறுத்து கடன் வரம்புகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.யார் தகுதியானவர்கள்?SBI.ன் www.sbi.co.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, உரிமையாளர்-விவசாயிகள், குத்தகைதார விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பங்குதாரர்கள் போன்ற அனைத்து விவசாயிகளும், ஒற்றை ஹோல்டிங் குழுக்கள் (எஸ்ஜிஹெச்) அல்லது கூட்டு உழவர் குழுக்கள், விவசாயிகள் உட்பட குத்தகைதாரர்கள் தகுதியானவர்கள் கிசான் கிரெடிட் கார்டு யோஜனாவின் கீழ் கிசான் கிரெடிட் கார்டு கடன் பெறாலாம்.
புதிய P.V.C Aadhar கார்டு அப்ளை செய்வது எப்படிஇந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், சமீபத்தில் புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியது. முதன் முதலில் வழங்கப்பட்ட ஆதார் கார்டு காகிதத்தால் ஆனது. தற்போது இந்த கார்டு பலரிடம் கிழிந்து போயும், அதிலுள்ள விபரங்கள் தெரியமாலும் உள்ளது. புதிதாக அறிமுகமாகியுள்ள ஆதார் பி.வி.சி கார்டில், டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பாதுகாப்பான கியூஆர் குறியீடு, ஹாலோகிராம், கோஸ்ட் படம், கில்லோச் முறை டிஜிட்டல் சைன், உள்ளிட்ட பல பாதுகாப்பு சிறப்பம்சங்களை கொண்டது. கிரேடிட் கார்டுகள் போல எளிதாக எங்கு வேண்டுமாலும் வைத்து கொள்ளலாம்.இதனை பெற UIDAI அமைப்பின் அங்கீகாரப்பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று, ரூ.50-ஐ கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் சைஸ் பாலிவினைல் குளோரைடு (பிவிசி) செயற்கை பிளாஸ்டிக் பாலிமர் அட்டையில் ஆதார் கிடைக்கிறது. அதன்படி, சில எளிய முறையில் நீங்கள் ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்யலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்ய நீங்கள் பின்பற்றக்கூடிய வழிமுறைகளை காணலாம்.முதலில் ஆதார்கார்டின் UIDAI வலைத்தளமானhttps://residentpvc.uidai.gov.in/order-pvcreprintஎன்ற வலைதளத்தில் உள்ளே செல்லவும். முகப்பு பக்கத்தில், ஆதார் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கெட் ஆதார் பிரிவின் கீழ், ஆர்டர் ஆதார் பி.வி.சி கார்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் 12 இலக்கங்கள் ஆதார் எண் அல்லது 16 இலக்க மெய்நிகர் ஐடி / 28 இலக்க ஈஐடி எண்ணனை பதிவு செய்யவும். பாதுகாப்பு குறியீடு அல்லது கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு Send OTP என்பதைக் கிளிக் செய்க.நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் நீங்கள் பெற்ற OTP.யை உள்ளிடவும். விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் சரிபார்த்து சமர்ப்பி என்பதைக் click செய்ய வேண்டும். கடைசியாக, கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து தேவையான தொகையை செலுத்துங்கள். உங்கள் கட்டணம் முடிந்ததும், ஐந்து வேலை நாட்களுக்குள் புதிய ஆதார் கார்டு Speed post மூலம் வீட்டிற்கு வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.