இல்லம் தேடிக்
கல்வி திட்டத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு
இல்லம்
தேடி கல்வி என்ற
திட்டம், 12 மாவட்டங்களில் முன்னோடி
திட்டமாக, கல்விதுறை சார்பில்,
செயல்படுத்தப்பட உள்ளது.
தன்னார்வலர்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
- சாதி, மத
பின்புலத்தை ஆராய்ந்து தேர்வு
செய்ய வேண்டும். - எந்த சாதிக்கும், மதத்துக்கும் சார்பாக
பணியாற்றுவோரைத் தேர்வு
செய்தல் கூடாது. - விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டவராக இருத்தல்
அவசியம். - பெண்களுக்கு முன்னுரிமை வேண்டும்.
- கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் தேர்வு
செய்ய வேண்டும். - குழந்தைகளை கையாளும்
திறனறி தேர்வு நடத்தப்பட
வேண்டும். - இணையதளங்களில் பதிவு
செய்தவர்களை தேர்வு செய்யும்
பொறுப்பு பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. - பள்ளிகள் வாயிலாக
தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களின் தகுதியை, ஒன்றிய
/ மாவட்ட அளவிலான குழுக்கள்
சரிபார்த்தல் அவசியம். - தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களுக்கு அடையாள
அட்டை வழங்கப்பட வேண்டும்.