கோவில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேதி
நீட்டிப்பு
திருத்தணி
முருகன் கோவிலில் உள்ள
காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி, அடுத்த மாதம்
12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி
முருகன் கோவில் மற்றும்
அதன் உபகோவில்கள் என,
மொத்தம் 29 கோவில்களில் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த
பணியிடங்களை நிரப்புவதற்கு, 12ம்
தேதி முதல், முருகன்
கோவில் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வினியோகம்
செய்யப்பட்டு வருகின்றன.
விண்ணப்பம் செய்ய அடுத்த மாதம்
7ம் தேதி வரை
நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில்,
12ம் தேதி மாலை
5:00 மணி வரை விண்ணப்பங்கள் பெறவும், பூர்த்தி செய்த
விண்ணப்பங்களை கோவில்
அலுவலகத்தில் ஒப்படைக்கவும், காலக்கெடு நீட்டித்துள்ளது.