Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

ஜேஇஇ பிப்ரவரி தேர்வு முடிவு மார்ச் 7-ம் தேதி வெளியாகிறது

 

ஜேஇஇ பிப்ரவரி
தேர்வு முடிவு மார்ச் 7-ம் தேதி வெளியாகிறது

ஜேஇஇ
பிப்ரவரி மாதத்துக்கான தேர்வின்
முடிவுகள் மார்ச் 7-ம்
தேதி வெளியிடப்படும் என்று
தேசிய தேர்வு முகமை
(
என்டிஏ) அதிகாரிகள் தகவல்
தெரிவித்துள்ளனர்.

நாடு
முழுவதும் உள்ள ஐஐடிகள்,
என்ஐடிகள் போன்ற மத்திய
உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை
படிப்புகள் சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ)
தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, நடப்பு ஆண்டில்
இருந்து ஆண்டுக்கு 4 முறை
தமிழ் உட்பட 13 மொழிகளில்
முதல்நிலை தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி,
முதற்கட்டமாக பிப்ரவரி
மாதத்துக்கான தேர்வுநாடு முழுவதும் 23-ம் தேதி
தொடங்கி, 26-ம் தேதி
வரை நடைபெற்றது.

இதுதொடர்பாக என்டிஏ
அதிகாரிகள் கூறியதாவது:

பிப்ரவரி
மாதத்துக்கான ஜேஇஇ
தேர்வு எழுத மொத்தம்
6
லட்சத்து 61,776 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, பி..,
பி.டெக்., படிப்புகளுக்கான முதல் தாளை 95 சதவீத
மாணவர்களும் பி.ஆர்க்.,
பி.பிளான் படிப்புகளுக்கான 2-ம் தாளை 81.2 சதவீத
மாண வர்களும் எழுதினர்.

15-ம் தேதி
மார்ச் மாத தேர்வு

இந்நிலையில், தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்,
முடிவுகள் எப்போது வெளியாகும் என்று பல மாணவர்கள்
தொடர்ந்து என்டிஏவை
அணுகி வருகிறார்கள். அதன்படி,
ஜேஇஇ பிப்ரவரிதேர்வுக்கான மதிப்பெண்
பட்டியல் ஓரிரு நாட்களில்
வெளியிடப்படும்.

அதேபோல்,
தேர்வு முடிவு மார்ச்
7-
ம் தேதி வெளியாகும். இதனைத்தொடர்ந்து, மார்ச்
மாதத்துக்கான ஜேஇஇ
தேர்வு 15-ம் தேதி
தொடங்கி 18-ம் தேதி
வரை நடக்கவுள்ளது.

கூடுதல்
தகவல்களை https://jeemain.nta.nic.in/
என்ற இணையதளம் மூலம்
மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]