Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
தமிழகத்தில் அடுத்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் ஆனது இணையவழி வினாடி-வினா போட்டி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே காணலாம்.
வாக்காளர் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல் (SVEEP) என்ற பெயரில் ஒரு திட்டத்தினை தேர்தல் ஆணையம் துவங்கி இருந்தது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தேர்தலில் பங்கேற்பது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த இணையவழியில் வினாடி வினா போட்டி நடத்த உள்ளது. அடுத்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இப்போட்டியில் நடைபெறும் அனைத்து சுற்றுகளும் Goal Quiz Sports என்ற Youtube இணையதளம் வழியே நடைபெறும். இதில் முதல் நிலை போட்டி முதலில் நடைபெறும் அதில் மூன்று சுற்றுகள் உள்ளது. முதல் சுற்று 25.10.2020 அன்று மாலை 4 மணிக்கும் 2,3 வது சுற்றுகள் முறையே 26.10.2020 அன்று காலை 11 மணி மற்றும் மலை 4 மணி அளவிலும் நடைபெறும். தேர்தல் மற்றும் பொது அறிவு சாந்த கேள்விகள் மட்டுமே கேட்கப்படும்.
போட்டியின் விதிமுறைகள் :
- சரியான பதிலை முதலில் பதிவிடுவோரே தொடர்ந்து போட்டியில் நீடிப்பர்.
- ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிலை பதிவிட முடியும்
- மொத்தம் 36 குழுக்கள் மட்டுமே அரையிறுதி போட்டிக்கு முன்னேற முடியும்.
- தேர்வானவர்களுக்கு அடுத்த கட்ட அறிவிப்புகள் அறிவிக்கப்படும்.
பரிசு தொகை :
- முதல் பரிசு – ரூ.50,000/-
- இரண்டாம் பரிசு – ரூ.25,000/-
- மூன்றாம் பரிசு – ரூ.15,000/-
Download Office Notice: Click Here
For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…
Check Related Post:
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |