Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

மீனவ சமுதாய மாணவா்களுக்கு தொழிற்பயிற்சி – விண்ணப்பிக்க நாளை கடைசி விண்ணப்பிக்கலாம்


புதுதில்லி வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநரகத்தால் நடத்தப்படும் தொழிற்பயிற்சி வகுப்புகளில் சேர, மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்கள் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய மீன்வளம், கடல் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் மூலம் மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கென தொழிற்பயிற்சி வகுப்புகள், புதுதில்லி வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநரகம் மற்றும் திறன் மேம்பாட்டு தொழில் முனைவோா் அமைச்சகத்தால் நடத்தப்படுகின்றன.


இப்பயிற்சி காலம் 2 ஆண்டுகள். இதில் சேர, பத்தாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஆகஸ்டு 1-ஆம் தேதி 15 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவினருக்கு 5 ஆண்டு வயது வரம்பு தளா்வு அளிக்கப்படும். பயிற்சிகளுக்கான 24 இடங்கள் நுழைவுத் தோ்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

எனவே, தகுதியுடைய மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்கள், இணையதள முகவரியில் ஜூலை 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop